ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி புதுச்சேரியில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப்போராட்டம்
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்கள் ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி இன்று காலை(11.02.09) சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவாக மாணவர்கள் எழுச்சிகொண்டு போராடி வரும் வேளையில் காங்கிரசு ஆட்சி புரியும் புதுச்சேரி மாநிலத்திலும் மாணவர்கள் அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். பாரதியார்பல்கலைக்கூட மாணவர்களது உண்ணாநிலைப்போராட்டத்தினை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் துவக்கி வைத்து மாணவர்களுக்கு ஈழ நிலவரம் பற்றியும் மாணவர்களது எழுச்சிப்பற்றியும் விளக்கவுரையாற்றினார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் விபரம் :
1) தீ.இரவிக்குமார்
2) ஆ.பன்னீர்செல்வம்
3) கா.இராசீவ்காந்தி
4) மு.சந்தோஷ்குமார்
5) த.அலெக்சாண்டர்
6) க.சிறீமுருகன்
7) சி.பச்சையப்பன்
8) கி.சிலம்பரசன்
9) ப.எழில்குமார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து அமைப்பினரும் பொதுமக்களும் மாணவர்களும் வாழ்த்தி உரையாற்றி அவர்களுக்குத் துணையாக இருந்து வருகின்றனர்.