உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Thursday, February 5, 2009

பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடாது இலங்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து கோரிக்கை !


பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கை அரசுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் கோரிக்கை விடுத்துள்ளன.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் ஆகியோர் சந்தித்துப் பேசிய பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அப்படிப்பட்ட தீர்வு ஏற்பட ஐநா மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் பேச்சுவார்த்தையை துவக்க இதுவே தருணம்.மேலும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் தற்காலிகமாக போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும். மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி சேவை அமைப்புகளின் உதவியைப் பெற அனுமதிக்க வேண்டும்.பாதுகாப்பான இடங்கள் மற்றும் மருத்துவமனைப் பகுதிகளில் இருதரப்பும் தாக்குதல் நடத்தக்கூடாது.போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க இருதரப்பினரும் அனுமதிக்க வேண்டும். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அவர்கள் ஒத்துழைப்பதுடன் அதன் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும்.சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Tuesday, February 3, 2009

புதுவகை எரிகுண்டுகள்; இன்று (செவ்வாய்) மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை 84 பேர் காயம்

"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் இன்று செவ்வாய் மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்றைய இந்த தாக்குதலில் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் சரிவர செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையும் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில் 55 பேரினது உடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேசமயம், புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மீது இன்று காலை 8:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். எரிக்கும் குண்டுகள் இதேவேளை, சிறிலங்கா படையினர் தற்போது ஏவும் பீரங்கி எறிகணைகள் யாவுமே வீழ்ந்து வெடிக்கும் இடத்தில் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் தன்மையுடையதாக கூறப்படுகிறது மனித உடல்களோ, மரங்களோ, கட்டடங்களோ, வாகனங்களோ எதுவாயிருந்தாலும் பற்றி எரிகின்றது. இதனால், அண்மைக்காலங்களில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றவர்கள் எல்லோருமே உடல் கருகி உயிரிழப்பதுடன், காயமடைகின்றவர்களும் மிகக் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகின்றனர் சிறிலங்கா படைகள் ஏவும் இந்த எறிகணைகள், எல்லாவற்றையும் எரித்துக் கருக்கும் தன்மை உடையவையாக இருப்பினும் இந்த எறிகணைகள் சரியாக எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read more...

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது லெப். கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, மேஜர் புலிவேந்தன் என்று அழைக்கப்படும் வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Read more...

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP