உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Friday, February 6, 2009

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பான் கீ மூன் ஜனாதிபதியிடம் தொலைபேசியில் கோரிக்கை



வட பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்தவிடம் தொலைபேசி மூலம் கோரியுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் ஜனாதிபதி மாளிகைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் கால் மணித்தியாலங்கள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

0 மக்கள் கருத்துக்கள்:

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP