உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Wednesday, February 11, 2009

கனேடிய வெளியுற துறை அமைச்சர் கேனனுக்கும் முகர்ஜிக்கும் இடையே தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை பிரச்சினைக்கு அதிகார பகிர்வே இறுதி தீர்வு என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கனேடிய வெளியுற துறை அமைச்சர் லோரன்ஸ் கேனனுக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இடையே நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்தரையாடலின் போது லோரன்ஸ் கேனன் இலங்கை நிலவரம் குறித்து பிரணாப் முகர்ஜியுடன் கலந்துரையாடி உள்ளார். இந்த கலந்துறையாடலின் போது வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் யுத்தத்தால் பாதிக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தநிலையில் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே பிரச்சினைக்கு தீர்வாகும் என பிரணாப் முகர்ஜி கனேடிய வெளியுற துறை அமைச்சரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.

0 மக்கள் கருத்துக்கள்:

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP