உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்
Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Thursday, February 5, 2009

பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடாது இலங்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து கோரிக்கை !


பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கை அரசுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் கோரிக்கை விடுத்துள்ளன.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் ஆகியோர் சந்தித்துப் பேசிய பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அப்படிப்பட்ட தீர்வு ஏற்பட ஐநா மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் பேச்சுவார்த்தையை துவக்க இதுவே தருணம்.மேலும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் தற்காலிகமாக போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும். மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி சேவை அமைப்புகளின் உதவியைப் பெற அனுமதிக்க வேண்டும்.பாதுகாப்பான இடங்கள் மற்றும் மருத்துவமனைப் பகுதிகளில் இருதரப்பும் தாக்குதல் நடத்தக்கூடாது.போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க இருதரப்பினரும் அனுமதிக்க வேண்டும். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அவர்கள் ஒத்துழைப்பதுடன் அதன் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும்.சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Tuesday, February 3, 2009

அமெரிக்க ராணுவம் ஒரு ஆண்டுக்குள் நாடு திரும்புமஒபாமா அறிவிப்பு

ஈராக்கில் தங்கி இருந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களில் பெரும்பகுதியினர் ஒரு ஆண்டு காலத்துக்குள் நாடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.

தேர்தல் கால வாக்குறுதி

ஈராக் நாட்டின் மீது கடந்த 2003-ம் ஆண்டு தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. அப்போது முதல் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இப்போது அந்த நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள். அங்கு இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கர்கள் கோரி வந்தனர். இதற்கு முந்தைய ஜனாதிபதி புஷ் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம் ஒன்று அல்லது இரண்டு பிரிகேட் (படைப்பிரிவு) என்ற அடிப்படையில் 16 மாதத்துக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறுவேன் என்று உறுதி மொழி கொடுத்தார்.

ஒரு ஆண்டுக்குள்

இந்த நிலையில் என்.பி.சி. டி.வி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒபாமா கூறுகையில், ஒரு ஆண்டு காலத்துக்குள் பெரும் அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள். நான் அமெரிக்க ராணுவத் தளபதிகளுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் ஈராக்கில் களப்பணியில் ஈடுபட்டு உள்ள தளபதிகளும் கலந்து கொண்டனர். ஈராக்கில் சமீபத்தில் மாநில சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து உள்ளது. அப்போது குறிப்பிடத்தக்க அளவில் வன்முறை எதுவும் நிகழவில்லை. எனவே ஈராக்கியர்கள் மீது மேலும் அதிகமான பொறுப்புகளை சுமத்தக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்க

ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்தை விட அதிகப்படுத்தப்படுத்தலாமா என்று ஒபாமா நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

ஈராக்போரில் பலியான அமெரிக்க ராணுவவீரர்களின் எண்ணிக்கை 4236 ஆகும். ஆப்கானிஸ்தான் போரில் 644 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலியான அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஒபாமா கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Read more...

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP