பிரான்சில் நாளை கறுப்பு தினம் அனுஷ்டிக்கவுள்ளதாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
இலங்கை சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர் என பிரான்சிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றை தினத்தில் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கறுப்பு தினமாகவும் கடையடைப்பு தினமாகவும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் விமானக் குண்டுவீச்சுக்களை உடன் நிறுத்தக்கோரியும், சர்வதேசமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் இப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 மக்கள் கருத்துக்கள்:
Post a Comment